கடை உரிமையாளர் சத்தியராஜ் தொழிலாளர் தூக்கிட்டு தற்கொலை

2258பார்த்தது
பவுஞ்சூர் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் இதே கிராமத்தை சேர்ந்த மகி என்பவருக்கு சொந்தமான மர எண்ணெய் செக்கு தயாரிக்கும் கடையில் கடந்த நான்கு மாத காலமாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த மர எண்ணெய் தயாரிக்கும் கடைக்கு அருகாமையில் உள்ள மற்றொரு கடையில் பெட்டிக்கடை வைத்தும் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் செல்வம் இவரது மனைவி அமலா அவர்கள் வீட்டில் இல்ல சுப நிகழ்ச்சிக்காக இரு தினங்கள் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.
சுப நிகழ்ச்சி முடிந்த பின்பு மீண்டும் செல்வம் கடைகளைத் திறக்க வந்துள்ளார். அப்பொழுது கடையின் உரிமையாளர் மகி மற்றும் உறவினர்களான குமார், குருசாமி ஆகியோர் செல்வம் அவர்களை கடை திறக்க செய்யாமல் சாலையில் நிற்க வைத்து அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளனர்‌.

இதனால் மன உளைச்சலை அடைந்த செல்வம் வீட்டிற்குச் சென்று மனைவி அமலா அவரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதை அடுத்து மன உளைச்சலில் இருந்த செல்வம் இவருக்கு நடந்ததை கடிதம் மூலம் எழுதி வைத்து செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பெயரில் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தற்கொலைக்கு காரணமாக இருந்த மகி, குருசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி