மறைமலை நகரில் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்

62பார்த்தது
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து மறைமலைநகரில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா. ம. க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர் ஜோதி வெங்கடேசனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை கேட்டுபேசினார்.
நரேந்திர மோடி இந்திய அளவில் பேசக்கூடிய தலைவர் மட்டுல்லமால், உலக அளவில் பேசக்கூடிய வியந்து பார்க்கக்கூடிய
சிறந்த தலைவர், உலக அளவில் ஏதாவது பிரச்சனை என்றால் மோடி என்ன கருத்து சொல்லபோகிறார் என்று உலகத் தலைவர்கள் உற்று நோக்குகின்றனர்.

400 நாடாளுமன்ற உறுப்பினருக்கு மேல் வெற்றி பெற்று இந்திய பிரதமராக 3-வது முறையாக மோடியை தேர்ந்தெடுக்க போகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் வீட்டில் படுத்து தூங்குபவர்கள் அல்ல மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்து
வார்கள். கடந்த முறை வெற்றி பெற்ற 38 எம். பி. கள் எதுவும் செய்யவில்லை, ஜனாதிபதிக்கு கிடைக்கின்ற மருத்துவ வசதிகள் ஏழைக்கும் கிடைக்க வேண்டும்.

மது இல்லாத தமிழகத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக கடந்த 44ஆண்டுகளாக நான் போராடியவன். அதற்காக அப்போது இருந்த 32 மாவட்டங்களிலும் மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தி இருக்கிறேன். தமிழ்நாட்டில் 370 ஜாதிகள் உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி