நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

558பார்த்தது
காஞ்சி தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பாக புதுப்பட்டினத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே உரையாடினார் அப்போது அவர் கூறுகையில் செய்யூர் தொகுதியை பொருத்தவரையில் நாம் ஒரு லட்சம் வாக்குகளை பெறுவதற்கான பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும், பாஜக அரசுடன் சமூக விரோத செயல்கள் ஈடுபடும் IT, ED, துறைகள் கூட்டணி வைத்திருக்கலாம் ஆனால் நம்முடன் மக்கள் உரிமைத் தொகை என்கின்ற மகத்தான திட்டம் என்றும் கை கொடுக்கும் எனவும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றவுடன் புதுப்பட்டினம் பகுதியில் நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும் எனவும் அதன் மூலம் பொது மக்களின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி