செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

63பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென்று சோதனை மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் எஸ் அருண் ராஜ் அப்பொழுது அதிக அளவில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது ஆய்வில் அதிக அளவில் பட்டா மாற்றம் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக்காக அளித்த மனுக்கள் அப்படியே நிலுவையில் காணப்பட்டது

இதில் ஒரு சில பணியாளர்கள் அரசு பணியில் வேலை செய்பவர்கள் மாத சம்பளம் பெற்றுக் கொண்டு பணிக்கே வருவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மெமோ கொடுத்தாலும் வாங்க மறுத்து வருகின்றார்களாம்

என அடுக்கடுக்கான புகார்களுக்குள்ளான செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் இன்று பரபரப்பாக காணப்பட்ட இதன் காரணமாக அனைத்து ஊழியர்களும் இன்று மாலை அவசரமாக கூட்டம் நடத்தி அனைத்து ஊழியர்களும் வருவாய் துறையின் சார்பில் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து பொதுமக்களுக்கு உடனடியாக பரிசீலனை செய்து அவர்களுக்கு தேவையான நியாயம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து ஊழியர்களும் தற்போது பணியில் வேகம் எடுக்க துவங்கியுள்ளனர்
இது போன்று மாவட்ட ஆட்சியர் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டாலே வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதிக்கு மேல் கோப்புகள் காத்து கிடக்க வேண்டிய நிலை வராது என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி