பள்ளி அளவிலான யோகா போட்டி திருக்காலிமேடு மாணவர்கள் அசத்தல்

75பார்த்தது
பள்ளி அளவிலான யோகா போட்டி திருக்காலிமேடு மாணவர்கள் அசத்தல்
வாலாஜாபாத் ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான யோகாசன போட்டி நடந்தது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மற்றும் யோகா பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.

இதில், காஞ்சிபுரம் திருக்காலிமேடு சஹானா யோகா பயிற்சி மையத்தைச் சேர்ந்த 13 மாணவ - மாணவியர் 6 முதல் -14 வயதிற்கு உட்பட்டோர் போட்டியில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பெற்றனர்.

இதில், பொற்செழியன், 9, அகிலன், 7, சாய் சந்தோஷ், 6, சரவணன், 9, சந்தோஷ், 14, ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

அகிலேஷ், 9, பிரபஞ்சன், 6, கிருத்திஷ், 6, ஜீவா, 11, சாய்வர்ஷா, 9, திவ்யா, 19, ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். சஹானா, 9, காவின்யா, 9, ஆகிேயார் மூன்றாம் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ - -மாணவியரை சஹானா யோகா பயிற்சி மைய நிறுவனரும், பயிற்சியாளருமான யோகா ஆசிரியர் நிர்மல்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி