அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி வழங்கிய எம்எல்ஏ

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் புகாரினை தொடர்ந்து மருத்துவமனையை திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மருத்துவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததுடன் எந்த மாதிரியான நோயாளிகளை கையாளுவதற்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனவும், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் வைப்பதற்காக குளிர்சாதனப்பெட்டி ( பிரிட்ஜ் ) வேண்டுமென மருத்துவர்கள் எம் எல் ஏ பாலாஜியிடம் கோரிக்கை வைத்ததை ஏற்று 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய குளிர்சாதன பெட்டியை மருத்துவமனைக்கு தனது சொந்த செலவில் வழங்கினார் மேலும் நோயாளிகள் இருக்கும் அறையை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை தரமாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் ஆய்வின்போது திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர்கள் தௌலத் பீவி, பானு செல்வகுமார் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான தனசேகர் உள்ளிட்டோருடன் மருத்துவர்கள், திமுக நிர்வாகி ஜெகதீஷ் விசிக நிர்வாகி மானாமதி நந்தா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி