மதுராந்தகத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய திமுகவினர்

62பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எட்டு குழந்தைகளுக்கு மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் அவர்கள் ஏற்பாட்டில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து புத்தாடைகளும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி, தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தேர்வு செயலாளர் சுந்தரமூர்த்தி, மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி