இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை

52பார்த்தது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தனர்  சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 மீனவர்களை மீட்க கோரிக்கை




ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த மாதம் 4ந் தேதி 2 படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கச்சத்திவு, நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் சென்ற 23 மீனவர்களை கைது செய்தனர் இலங்கை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மத்திய அரசும் மாநில அரசும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பேச்சுவார்த்தைக்கு பின்னர் இலங்கை அரசு 20 மீனவர்களை விடுதலை செய்தது. படகுகளை ஒட்டி சென்ற ஜான் பிரிட்டோ, ராபர்ட் பிரன்சிஸ் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனையும் 2வது முறையாக எல்ல. தாண்டி மீன் பிடித்ததாக மெல்சன் என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.  


விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மீனவர்கள் 20 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்த பின் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.   20 மீனவர்களை அரசு செல்வில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி