100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு

59பார்த்தது
கோவளம் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சியில் உள்ள நீல கொடி கடற்கரையில் நடைபெற்றது நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா தங்கம் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர், அதனை தொடர்ந்து கடற்கரையில் மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்த மணல் சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் முழுமையாக வாக்களிப்போம் என்ற ஒரு கை விரல் காட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இதனைத் தொடர்ந்து அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகலை செல்வன் பூமகள் தேவி திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி சமூக ஆர்வலரும், எஸ் டி எஸ் நிறுவனருமான சுந்தர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி