ஊராட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

76பார்த்தது
நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 716 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை நமக்கு இல்லை அவர்களுக்கு என அமைச்சர் தாமோ அன்பரசன் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி கிளை செயலாளர்களுக்கு மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே தனியார் திடலில் நடைபெற்றது இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு பேசினர்

அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டு குழு தலைவர் இ ஷங்கர் பேசுகையில் நாம் இந்த கூட்டணி பலத்துடன் மக்களை சந்தித்தாலும் 716 வாக்குச்சாவடிகள் பதட்ட மாணவை என மாவட்ட நிர்வாகம் அடையாளம் காணப்பட்டுள்ளது

எனவே இது வாக்குச்சாவடிகளில் நாம் கவனமாக பணியாற்ற வேண்டும் என்று பேசினார்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தமோஅன்பரசன் பதட்டமான வாக்குச்சாவடிகள் 716 உள்ளதாக பேசினீர்கள் ஆனால் அது நமக்கு அல்ல அவர்களுக்குத்தான் பதட்டம் நம் அசுர பலத்துடன் 2019 முதல் மிகப்பெரிய கூட்டணியில் களம் காண்கின்றோம் எனவே அச்சப்பட தேவையில்லை பதட்டமான வாக்குச்சாவடி நமக்கில்லை அவர்களுக்கென்று பேசியதால் மேடையில் கலகலப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி