கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் காவல் நீட்டிப்பு

70பார்த்தது
கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 பேரின் காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 24 பேரின் நீதிமன்ற காவல் வரும் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சி. பி. சி. ஐ. டி. , போலீசார், சாராயம் விற்றவர்கள் மற்றும் மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இவர்களின் நீதிமன்ற காவல் நேற்று நிறைவடைந்ததையொட்டி, காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 13ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி