மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழப்பு

63பார்த்தது
மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிறுபனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமசாமி (56), இவர் காளை மாடுகளை வைத்து உழவு ஓட்டும் பணி செய்து வரு கிறார். இந்நிலையில் சிறுப னையூர் பகுதியில் இருந்து அவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்று கொண் டிருந்தபோது வழியில் மின் சார வயர் அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் ராமசாமி மாடு ஓட்டி சென்றதால் மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து இரு மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தது. மேலும் அதனை ஓட்டி வந்த ராம சாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் திருப்பாலப் பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தினர். இறந்து போன மாடுகளின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி