மணலுார்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்

55பார்த்தது
மணலுார்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்
மணலுார்பேட்டை மற்றும் விளந்தை கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று(செப்.11) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மதியம் விளந்தை காலனி பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. நேராக தென்பெண்ணை ஆற்றிற்கு மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது.

அதேபோல் மணலுார்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று மாலை 2. 30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 5: 30 மணிக்கு கூவனூர் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி