கள்ளக்குறிச்சி: கிராவல் கடத்தல் ஒருவர் கைது

67பார்த்தது
கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி வி. ஏ. ஓ. , வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 10: 00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அண்ணாநகர் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.

கூத்தக்குடியை சேர்ந்த செங்கமலம் மகன் மணிகண்டன், 39; என்பவர் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து வி. ஏ. ஓ. , வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், மணிகண்டனை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி