இளம்பெண் கையை குத்தி கிழித்த இரும்பு கம்பி

58பார்த்தது
இளம்பெண் கையை குத்தி கிழித்த இரும்பு கம்பி
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பவித்ரா (19) என்பவர் சென்டிரல் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று (ஜூன் 30) வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், சாலையோரம் இருந்த இரும்பு கம்பி ஒன்று அவரது உள்ளங்கையை குத்தி கிழித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், இரும்பு கம்பியை அறுத்து எடுத்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி