15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது

77பார்த்தது
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் கைது
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (24) என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கிருந்த 15 வயது சிறுமியுடன் பழகி, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன் பேரில் சிறுமியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் பெற்றோருக்கு விஷயம் தெரியவந்தது. உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அருள்ராஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி