மதுரை மாவட்டம் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் முதல் நாள் வாங்கிய சிக்கனை மறுநாள் சூடு பண்ணி சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்படவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிக்கனை சுடவைத்து சாப்பிட்டதால் ஆனந்த்ராஜ் உயிரிழந்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.