பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

53பார்த்தது
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று (ஜூன் 9) மோதின. இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்தார். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

தொடர்புடைய செய்தி