ஆளுங்கட்சியா இருந்தா மட்டும் தான் எதிர்ப்பேன் - பழனிசாமியின் பலே அரசியல்

80பார்த்தது
அரக்கோணத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத நபராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என பேசி வருகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள பழனிசாமி, "எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் எப்படி மோடியை எதிர்ப்பது, ஆளுங்கட்சி ஆக இருந்தால் எதிர்ப்பேன்" என பேசியுள்ளார். பழனிசாமியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். இவரின் இந்த பேச்சு அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியில் உள்ளார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருவதை உண்மையாக்குவது போல் உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
News courtesy: Sun news
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி