ரூ.4 கோடிக்கும் எனக்கும் தொடர்பில்லை - நயினார் நாகேந்திரன்

64பார்த்தது
ரூ.4 கோடிக்கும் எனக்கும் தொடர்பில்லை - நயினார் நாகேந்திரன்
மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார். சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவரிடம் நடத்தப்பட்ட 7 மணி நேர விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், "ரூ.4 கோடி விஷயத்தை 4 மாதங்களாக பேசுவதா? நல்ல செய்திகளைப் போடுங்கள், தரமான செய்திகளைப் போடுங்கள்” என ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி