பாம்பு பண்ணை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்

61பார்த்தது
பாம்பு பண்ணை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்
கால்நடை வளர்ப்பு போல பாம்பு பண்ணை வைத்து பல கோடிகளில் சம்பாதிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா? பாம்பு வளர்த்து லாபம் சம்பாதிக்கும் தொழில் உலகில் ஒருசில நாடுகளில் செய்யப்படுகிறது. சீனாவின் ஜிசிகியாவோ என்ற கிராமத்தில் மக்கள் பெரிய அளவில் பாம்புகளின் பல வகைகளை வளர்த்து நல்ல லாபம் ஈட்டுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாம்புகள், நாட்டிலுள்ள விலங்கு உணவு சந்தையில் விற்கப்படுகின்றன. மக்கள், பாம்புகளை வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள். மருத்துவத்துறையில் மருந்துக்காக பாம்பின் விஷம் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் விஷ பாம்புகளையும் வளர்த்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி