கடும் வெயில்.. முருங்கை விளைச்சல் சரிவு.. விவசாயிகள் வேதனை

51பார்த்தது
கடும் வெயில்.. முருங்கை விளைச்சல் சரிவு.. விவசாயிகள் வேதனை
தமிழ்நாட்டில் முருங்கை சாகுபடியில் கரூர் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. அங்குள்ள பருவநிலை மற்றும் மண்ணின் தன்மை முருங்கைக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத வெப்பத்தால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி