'இரட்டை இலை' சின்னத்துக்கு கேரளாவிலும் சண்டை

57பார்த்தது
'இரட்டை இலை' சின்னத்துக்கு கேரளாவிலும் சண்டை
கேரளாவில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததையடுத்து, கோட்டயம் தொகுதியில் கட்சியினர் சின்னம் விவகாரத்தில் போட்டி போட்டுக் கொள்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் கேரள காங்கிரஸ் வேட்பாளர் பிரான்சிஸ் ஜார்ஜுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. கேரள காங்கிரஸ் கட்சி பிளவுக்குப் பிறகு, இரட்டை இலை சின்னத்துக்காக ஜோஸ் மற்றும் ஜோசப் ஆகிய தலைவர்களின் அணிகளுக்கு இடையே நடந்த சட்டப் போராட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இந்த நிலையில், எந்த அணிக்கு இரட்டை இலை வழங்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு அந்த தொகுதியில் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வரும் நிலையில், கேரளாவில் உள்ள கேரள காங்கிரஸ் (எம்) கட்சியும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது.

தொடர்புடைய செய்தி