பேருந்தில் ஏற முயன்றவர் மீது ஏறிய பேருந்து

48689பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வரதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக திருப்பத்தூருக்கு செல்ல அண்ணா நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற முயற்சித்துள்ளார். பேருந்து நிற்பதற்கு முன்பு ஏற முயன்றதால் தடுமாறி விழுந்த அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி