
ஈரோடு: கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கல்விக்கடன்
தமிழக சட்டப்பேரவையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா கூட்டுறவு வங்கிக் கடன் தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "கல்விக்கடன் வழங்கும் நடைமுறை கூட்டுறவு வங்கியில் இருக்கிறது. ஆனால் ஓரளவுக்கு தான் வழங்க முடியும். பொதுமக்களின் சேமிப்பை வைத்து மட்டுமே கடன் வழங்கப்படும். வருங்காலங்களில் வைப்புத் தொகையின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.