எஸ். டி. பி. ஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

78பார்த்தது
சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் எஸ். டி. பி. ஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

பாஜக அரசின் மதங்களால் மக்களை பிளவுபடுத்தும் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மெழுகுவத்தி ஏந்திய மக்கள் திரள் போராட்டம் மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட துணைத்தலைவர் ஜம்பை. ரஃபிக், மாவட்ட செயலாளர்கள் முனாப், சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் பர்ஹான் அகமது, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் சபீர் அகமது, செயலாளர் தளபதி பசீர், மேற்கு தொகுதி செயலாளர் மஸ்தான், பவானி தொகுதி தலைவர் முகமது ஜாபிர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், விமன் இந்தியா மூவ்மெண்ட் மகளிர் அணி மாவட்ட தலைவர் சபீனா, பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஷஃபான், சமூக ஊடகணியின் மாவட்ட செயலாளர் தாஜுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி