9 மாதங்களில் மின் விபத்தால் 487 பேர் உயிரிழப்பு

64பார்த்தது
9 மாதங்களில் மின் விபத்தால் 487 பேர் உயிரிழப்பு
வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்குதல், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட களப்பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக மின்விபத்துகள் ஏற்படுகிறது. இதன்படி, கடந்த 9 மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மின் விபத்துகளில் சிக்கி 40 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இவை தவிர, 341 விலங்குகளும் மின்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி