தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் தனது சின்னமான சைக்கிளில் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
தமிழகம் முழுவதும் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயகுமார் தனது சின்னமான சைக்கிளில் வந்து காலிங்கராயன் பாளையம் மேட்டு நா சுவாம் பாளையத்தில் அமைந்துள்ள ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.