பவானி: கோர விபத்தில் டாக்டர் தம்பதி பலி - வீடியோ

14240பார்த்தது
பவானி அருகே கார் மீது லாரி மோதியதில் டாக்டர் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் புதுசாம்லியை சேர்ந்தவர் மாதப்பன், 75; டாக்டர். இவரது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பத்மாவதி, 72; டாக்டர். தம்பதி இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 3 மணிக்கு ஃபோர்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.

பவானி–மேட்டூர் மெயின் ரோட்டில் ஊராட்சிக்கோட்டை பேரேஜ் அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி காரில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து, பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி