மின் தகன மேடை: ஈஷா அறக்கட்டளை, அரசு பதிலளிக்க உத்தரவு

58பார்த்தது
மின் தகன மேடை: ஈஷா அறக்கட்டளை, அரசு பதிலளிக்க உத்தரவு
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மின் தகன மேடை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கு இன்று (மே 29) விசாரணைக்கு வந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு ஜுன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி