போதையில் கார் ஓட்டி விபத்து.. இளைஞருக்கு தர்ம அடி

81பார்த்தது
நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் அருகே சாலையில் சென்ற கார் ஒன்று, பொதுமக்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. உடனே அந்த காரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், ஓட்டுநர் அருணை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர். மேலும், அவர் போதையில் காரை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பொதுமக்களிடம் இருந்து அருணை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி