பலருக்கும் படுத்தவுடன் தூக்கம் என்பது முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால், சில எளிய முறைகளைப் பின்பற்றினால் இது சாத்தியமாகும். மன அழுத்தம் மற்றும் பதட்டம், கவலைகளால் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு பிராணாயாமம் பயனுள்ளதாக இருக்கும். தூங்கும் போது மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே சரியான நேரத்தில் தூங்கலாம். இரவு தூங்குவதற்கு முன்பு டைரி எழுதும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் மனதில் உள்ள வேண்டாத விஷயங்களை அனைத்தையும் வெளியே கொட்டிவிட முடியும்.