இறந்த உயிர்கள் பற்றி திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வருத்தமில்லை

58பார்த்தது
இறந்த உயிர்கள் பற்றி  திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வருத்தமில்லை
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. இதில் கலந்துக் கொண்ட பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விஷச்சாராயம், கள்ளச்சாராயம், மெத்தனால் போன்றவற்றால் 70 பேர் இறந்துள்ளனர். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை. இது பற்றி பேசி தான் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். இறந்த உயிர்களை பற்றி வருத்தப்படாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் பேசுகின்றன.” என்றார்.

தொடர்புடைய செய்தி