"3 மாத விசாரணைக்கு பிறகு உரிய விளக்கம் அளிக்கப்படும்"

69பார்த்தது
"3 மாத விசாரணைக்கு பிறகு உரிய விளக்கம் அளிக்கப்படும்"
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக 3 மாத விசாரணைக்கு பிறகு உரிய விளக்கம் அளிக்கப்படும் என தனி நபர் ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் பேட்டியளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "விசாரணைக்கு இடையில் எந்த தகவலும் தெரிவிக்க முடியாது, முழுமையாக விசாரித்து அறிக்கை அளிக்கப்படும். விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி