திண்டுக்கல்: கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் தர்ணா

6255பார்த்தது
திண்டுக்கல்லில் பிரிந்து சென்ற தனது கணவரை சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவருடைய கணவன் மகேந்திரன் இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். வேலைக்குச் சென்ற இடத்தில் மகேந்திரனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு தற்போது முத்துமாரியிடம் இருந்து மகேந்திரன் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை காலை 11. 30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முத்துமாரி ஆட்சியரை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சமூக நலத்துறை தான் இது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் எனவே அங்கு செல்லுங்கள் எனக் கூறவே அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே மீண்டும் மாவட்ட ஆட்சியரின் அறைக்கு ஓடோடி வந்த முத்து மாரி திடீரென தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தான் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து வந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கண்ணீருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி