6 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

61பார்த்தது
6 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கூர்பட்டி-புஸ்பாகா அருகே வனப்பகுதியில் புதன்கிழமை ஒரு பெரிய என்கவுன்டர் நடந்தது. மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. பின்னர், என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் இருந்து 6 மாவோயிஸ்டுகளின் சடலங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். DRG, CRPF மற்றும் COBRA குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.

தொடர்புடைய செய்தி