புதிய நிர்வாகிகள் பதிவி ஏற்பு விழா

1074பார்த்தது
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் பொறுப்பேற்று கொண்டனர். இதில் தலைவராக குமரேசன் செயலாளராக கென்னடி பொருளாளராக ஜெயலட்சுமி துணை தலைவராக சிவக்குமார் இணைச் செயலாளராக ஜெயக்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி