திண்டுக்கல் அருகே நாகல் புதூர் 1வது தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 25). இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று பணியை முடித்துவிட்டு அவரது வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சிவா புகார் செய்தார். அதன் பேரில் நகர் வடக்கு போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.