நீதிபதி என பொய் கூறியவர் கைது

3028பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு தர்மபுரியை சேர்ந்த ரமேஷ்பாபு(57) என்பவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது தன்னை நீதிபதி என்று கூறி முன்னுரிமை கேட்டபோது அடையாள அட்டையை கேட்ட ஊழியர்களிடம், காட்ட மறுத்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பொய் கூறியது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி