திண்டுக்கல் பேகம்பூரில் பொய் வழக்கு பதிவு செய்து ஹாரிஸ் என்பவரை கைது செய்ததால் உறவி
னர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவரை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் துறையினர் பொய் வழக்கில் கைது செய்ததாக கூறப
்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஹாரிசின் உறவினர்கள் திண்டுக்கல் மதுரை ரோடு பேகம்பூர் பகுதியில் வியாழக்கிழமை மதியம் 2. 30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த உறவினர்களிடம் ஹாரிஸ் என்பவரது மீது பொய் வழக்கு பதிவு செய்யவில்லை, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளோம்.
விசாரணை முடிந்தவுடன் அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பேகம்பூர் சாலையில் சிறிது நேரம்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.