சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது

586பார்த்தது
திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது.

திண்டுக்கல் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், ஆய்வாளர் புவனேஸ்வரி, சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், போலீசார் பிரதீபன், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின், மணிகண்டன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி அளவில் திண்டுக்கல், நிலக்கோட்டை, மைக்கேல் பாளையம், கோபால்பட்டி, அய்யலூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்ற அமல்ராஜ், சுப்பிரமணி, சுரேஷ், தோமையார், லிங்கம், முருக பாண்டி ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 55 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி