களை இழந்த ஆட்டுச் சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை

1094பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக நத்தம் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, திருச்சி, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடுகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் நத்தம் சந்தைக்கு வருகின்றனர்.

மேலும் கடந்த வருடம் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வரை ஆடு விற்பனை நடைபெற்றது
இந்த நிலையில் இவ்வாண்டு ரம்ஜான் பண்டிகை தின சில தினங்களில் உள்ள நிலையில் இன்று   அதிகாலை  சந்தை கூடியது வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும் வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வியாபாரிகள் பணம் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளது கொண்டு வந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை ஒரு ஆடு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 49 ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தால் 2 முதல் 3 ஆடுகள் மட்டுமே வாங்க முடியும் என்பதால் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை

இதனால் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனையாகும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் மட்டும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி