நத்தம் அருகே சிறுகுடி மந்தைமுத்தாலம்மன் கோயில் விழா!

2605பார்த்தது
நத்தம் அருகே சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 26ந் தேதியன்று நல்லகண்டத்தில் செய்யப்பட்ட சாமி சிலை அதிர்வேட்டுகளுடன் கோயில் மந்தையை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து கிழக்கு தெரு கோயிலை சென்றடையும் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் முத்தாலான ஆரத்தி குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்குஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்னர் அம்மன் சர்வ அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் கோயிலை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. நேற்று அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு, அரண்மனை பொங்கல் போன்ற நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று மாலை மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகள் தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை என்னும் இருப்பிடம் போய்ச் சேர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிறுகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி