வேட்பாளரை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிரச்சாரம்

2942பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கும் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் அப்பொழுது தமிழகத்தில் நடைபெற்ற நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

இந்தியாவில் எங்கும் இல்லாத இலவச பேருந்து வசதி மகளிர் உதவித்தொகை திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தத்தில் தான் அதிக அளவு மகளிர் உதவித்தொகை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். 84 சதவீதம் பெண்களுக்கு மகளிர் உதவி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 17 லட்சம் பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கனவு இல்லம் 360 சதுர அடியில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மையர் எதிராக சிஏஏ சட்டம் அதிமுக மற்றும் பாமகவினரால்தான் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் பரப்புரையில் திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி