கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவருக்கு மறுமணத்திற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்தது. நிச்சயத்தன்று தம்பதிகள் சேர்ந்து வாழ வீடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்லி மணமகளின் உறவினர்கள் மருத்துவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர். பணத்துடன் மடிக்கணினி அடங்கிய பை, கைபேசி, நகை உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு மணமகனை ஏமாற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி நடத்திய கும்பல் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.