காரில் கஞ்சா கடத்திய கொலை வழக்கில் 4பேர் கைது

582பார்த்தது
காரில் கஞ்சா கடத்திய கொலை வழக்கில் 4பேர் கைது
திண்டுக்கல் அருகே 4பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் கஞ்சா கடத்திய கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் கைது செய்தனர். 1 அரை கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல், வடமதுரையை அடுத்த மோர்பட்டி பிரிவு அருகே வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் காரில் கஞ்சா கடத்தி வந்த முகமது மீரான், முகமது இர்பான், முகமது அப்துல்லா, ஷேக் அப்துல்லா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1. 1/2 கிலோ கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி