நத்தம் அருகே விஷம் குடித்து 2 பேர் தற்கொலை

83பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 74. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில்
வெறுப்படைந்த ஆறுமுகம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை
பலனில்லாமல் உயிரிழந்தார்.

இதேபோல் நத்தம் அருகே வத்திபட்டி கவராயபட்டியை சேர்ந்தவர் கதிரவன் வயது 28. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும். இதனால் கடந்த மாதம் 17-ம் விஷம் குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கதிரவன் உயிரிழந்தார். இந்த 2
சம்பவங்கள் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி