ஜல்லிக்கட்டில் வென்ற காளை பரிதாபமாக பலி

5814பார்த்தது
திண்டுக்கல் தவசிமேடை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற காளை பரிதாபமாக உயிரிழப்பு.

திண்டுக்கல் அருகே தவசி மேடையில் ஞாயிறன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் தேனி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. இந்த நிலையில் மதுரை அண்டாம் பட்டியை சேர்ந்த வினோத் என்பவரின் காளை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றது. பின்னர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய காளை அந்த பகுதியில் உள்ள தோட்டத்து பகுதிகளுக்குள் சென்றது இதை அடுத்து மாட்டின் உரிமையாளர் காளையை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ‌

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் வேலாம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்து பகுதியில் காளை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த உரிமையாளர் வினோத் அவரது துண்டை அசைத்து கூப்பிட்டார். உடனே தன் எஜமானை கண்டு துள்ளி குதித்து ஓடி வந்த காலை சுமார் 80 அடி ஆழம் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தடுமாறி கீழே விழுந்தது.

இதையடுத்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி காளையை பிணமாக மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி