அரசு சார்பில் குளிர்சாதன கிடங்கு அமைப்பதாக வாக்குறுதி

1053பார்த்தது
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம் நகரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது வேட்பாளர் முகம்மது முபாரக் பேசுகையில், “மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். பாராளுமன்ற உறுப்பினராக நான் வெற்றி பெற்றால் ஒட்டன்சத்திரத்தில் இயங்கும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காய்கறிகளை சேமித்து வைக்க அரசு சார்பில் குளிர்சாதன கிடங்கு அமைக்க முயற்சிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் நகரின் நாகணம்பட்டி-காளியம்மன் கோவில், சம்சுதீன் காலனி -12 வது வார்டு, காந்திநகர் - காளியம்மன் கோவில், தும்மிச்சம்பட்டி - முத்தாளம்மன்கோவில், தும்மிச்சம்பட்டி 15-வது வார்டு காளியம்மன் கோவில், பழனிக்கவுண்டன்புதூர் - தலைவாசல் அரசமரம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் என். பி. நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், எஸ். டி. பி. ஐ. நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி