தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை

51பார்த்தது
திண்டுக்கல்லில் தேர்தல் பறக்கும் படை மூலம் நான்கரை கோடி தங்கம் பறிமுதல். உரிய ஆவணம் உள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர். எஸ். ரோடு பகுதியில் ஆனந்தபாபு தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் வாகன
சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,

வேனில் நான்கரை கோடி மதிப்புள்ள தங்கநகைகள் இருப்பதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள், வாகனத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்கள் உள்ளதாக குறிப்பிடும் நிலையில் அது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி